திருமணம் செய்ய காதலி வற்புறுத்தியதால் இளைஞர் தற்கொலை!

 

திருமணம் செய்ய காதலி வற்புறுத்தியதால் இளைஞர் தற்கொலை!

சென்னை

குன்றத்தூரில் திருமணம் செய்ய காதலி வற்புறுத்தியதால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை குன்றத்தூர் சிவன்கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (30). இவர் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனவருத்தம் காரணமாக அந்த பெண்ணை விட்டு சதீஷ் பிரிந்ததாக கூறப்படுகிறது.

திருமணம் செய்ய காதலி வற்புறுத்தியதால் இளைஞர் தற்கொலை!

இந்த நிலையில், அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சதிஷிடம் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த சதீஷ், நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து உறவினர்கள் அளித்த தகவலின் பேரில் குன்றத்தூர் காவல் நிலைய போலீசார் சடலத்தை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.