பொறியியல் மாணவியை திருமணம் செய்து ஏமாற்றிய இளைஞர் கைது

 

பொறியியல் மாணவியை திருமணம் செய்து ஏமாற்றிய இளைஞர் கைது

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் பொறியியல் மாணவியை திருமணம் செய்து ஏமாற்றிய கூலி தொழிலாளி கைதுசெய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர், நாமக்கல் மாவட்டம் குமாரபளையத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை தொடர முடியாத நிலையில், கடந்த ஆண்டு ஜுலை மாதம் சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த காட்டூரில் உள்ள தனது தோழியின் வீட்டில் தங்கியிருந்து வந்தார்.

பொறியியல் மாணவியை திருமணம் செய்து ஏமாற்றிய இளைஞர் கைது

அப்போது, அந்த பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி பாலமுருகன் என்பவருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது காதலாக மாறிய நிலையில் கடந்த டிசம்பர் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் திருமணம் முடிந்த சில நாட்களிலேயே பாலமுருகன் மாணவியை கைவிட்டு பிரிந்து சென்றுள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட மாணவி, கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், நேற்று எடப்பாடியில் இருந்த பாலமுருகனை கைதுசெய்தனர்.