இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

 

இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


ஈரோடு, ஆக.22-
ஈரோடு குமரன் நகர் முள்ளாம்பரப்பு பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன் இவரது மனைவி தீபிகா வயது 22. இவர்களுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. தீபிகாவுக்கு வயிற்றுவலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது இதனால் அவர் வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று மீண்டும் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து தீபிகா தற்கொலை செய்ய முடிவெடுத்து தூக்கு போட்டு கொண்டார்.

இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

இதையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே தீபிகா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருமணம் ஆகி 3 ஆண்டுகள் தான் ஆவதால் இதுகுறித்து ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகிறார்.