காதல் திருமணம் செய்த இளம்பெண் மின்சாரம் தாக்கி பலி!

 

காதல் திருமணம் செய்த இளம்பெண் மின்சாரம் தாக்கி பலி!

திருச்சி

திருச்சியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி திருவானைக்காவல் நரியன்தெருவை சேர்ந்தவர் சிக்கந்தர் பாஷா. இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த தனலட்சுமி(20) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு வயதில் பெண் உள்ளது.

காதல் திருமணம் செய்த இளம்பெண் மின்சாரம் தாக்கி பலி!

இந்த நிலையில் நேற்றிரவு வீட்டில் மின்விளக்கை ஆன் செய்தபோது திடீரென மின்சாரம் பாய்ந்ததில் தனலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கணவர் அளித்த தகவலின் பேரில் ஶ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, தனலட்சுமிக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால், இந்த சம்பவம் குறித்து ஶ்ரீரங்கம் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.