குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை… கோட்டாட்சியர் விசாரணை…

 

குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை… கோட்டாட்சியர் விசாரணை…

நெல்லை

நெல்லை அருகே திருமணமான ஒரே ஆண்டில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டம் மானூர் அடுத்த பள்ளமடை பகுதியை சேர்ந்தவர் முத்து. லாரி ஓட்டுநரான இவருக்கு கடந்த ஆண்டு மாலதி(23) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அவர்களை குடும்பத்தினர் சமாதானம் செய்து வைத்திருந்த நிலையில், நேற்று முத்து – மாலதி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது.

குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை… கோட்டாட்சியர் விசாரணை…

இதனால் மனமுடைந்த மாலதி வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த மானூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கணவர் வீட்டாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, திருமணமாகி ஓராண்டுக்குள் மணப்பெண் உயிரிழந்துள்ளதால், இந்த சம்பவம் குறித்து கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.