ரேஷனில் நாளை முதல் கொரோனா நிதி பெறலாம்!

 

ரேஷனில் நாளை முதல் கொரோனா நிதி பெறலாம்!

முழு ஊரடங்கான நாளை ரேஷனில் கொரோனா நிதியான ரூ.2000 ஐ பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷனில் நாளை முதல் கொரோனா நிதி பெறலாம்!

இந்நிலையில் கொரோனா நிவாரண தொகையான 2000 ரூபாயை நாளை முதல் ரேஷன் கடைகளில் பெற்று கொள்ளலாம் என்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது. பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, முறையாக சமூக இடைவெளி விட்டு கொரோனா நிவாரண தொகையை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரேஷனில் நாளை முதல் கொரோனா நிதி பெறலாம்!

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “நாளை மற்றும் வருகின்ற 23ஆம் தேதி ஆகிய இரு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏற்கனவே 16.5.2021 அன்று முதல் தவணை நிவாரண தொகை ரூ. 2000 வழங்குவதற்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது. எனவே குடும்ப அட்டை தாரர்களின் நலன் கருதி நாளை நிவாரண உதவி பெறுவதற்கு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ள, குடும்ப அட்டைதாரர்கள் மட்டும் நிவாரணத்தொகை ரூ.2000ஐ காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை பெற்றுக் கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது