பா.ஜ.க. ஆட்சி அமைந்தால் ரவுடிகளுக்கு உ.பி.யில் என்ன நடந்ததோ அதுதான் இங்கும் நடக்கும்… யோகி ஆதித்யநாத்

 

பா.ஜ.க. ஆட்சி அமைந்தால் ரவுடிகளுக்கு உ.பி.யில் என்ன நடந்ததோ அதுதான் இங்கும் நடக்கும்… யோகி ஆதித்யநாத்

மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தால் திரிணாமுல் காங்கிரஸ் ரவுடிகளுக்கு (குண்டர்கள்) உத்தர பிரதேச குண்டர்கள் சந்தித்த அதே விதியை சந்திப்பார்கள் என்று யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை செய்தார்.

மேற்கு வங்கத்தில் 294 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மொத்தம் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. 3ம் கட்ட தேர்தல் வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. மேற்கு வங்கம் ஜங்காய்பராவில் பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்று பேசினார்.

பா.ஜ.க. ஆட்சி அமைந்தால் ரவுடிகளுக்கு உ.பி.யில் என்ன நடந்ததோ அதுதான் இங்கும் நடக்கும்… யோகி ஆதித்யநாத்
திரிணாமுல் காங்கிரஸ்

அப்போது யோகி ஆதித்யநாத் பேசுகையில் கூறியதாவது: மேற்கு வங்கத்தில் நாம் காணும் ஒரு வகையான ரவுடியிசம், காஷ்மீரில் இதே போன்ற இடையூறு ஏற்படுத்த பயன்படுத்தப்பட்டது. இன்று காஷ்மீரில் தீவிரவாதம் இல்லை ஆனால் வளர்ச்சி அதிகரித்து வருகிறது. தேர்தல்முடிவுகள் வெளிவந்த பிறகு திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் முழங்காலில் இருப்பார்கள்.

பா.ஜ.க. ஆட்சி அமைந்தால் ரவுடிகளுக்கு உ.பி.யில் என்ன நடந்ததோ அதுதான் இங்கும் நடக்கும்… யோகி ஆதித்யநாத்
மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. அரசு அமைவதால், திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் உத்தர பிரதேச குண்டர்கள் போலவே அதே விதியை சந்திப்பார்கள். திரிணாமுல் காங்கிரஸ் சகோதரி (மம்தா பானர்ஜி) மோசமான மொழியை பயன்படுத்தினால் மேற்கு வங்க இளைஞர்கள் பொருத்தமான பதிலடி கொடுப்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.