அதிவேகத்தில் யாஷிகா…சத்தமாக பாட்டு போட்டு நண்பர்களுடன் ஆட்டம்…அதிர வைக்கும் சிசிடிவி காட்சி!!

 

அதிவேகத்தில் யாஷிகா…சத்தமாக பாட்டு போட்டு  நண்பர்களுடன் ஆட்டம்…அதிர வைக்கும் சிசிடிவி காட்சி!!

பிக்பாஸ் பிரபலமான யாஷிகா இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா, ஜாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த சனிக்கிழமை தனது தோழி பவானி மற்றும் 2 ஆண் நண்பர்களுடன் சேர்ந்து சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு காரில் சென்றார். பின்னர் மீண்டும் இரவு 10 மணி அளவில் புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்தபோது மாமல்லபுரம் அருகே இவர்களது கார் திடீரென விபத்துக்குள்ளானது. இதில் யாஷிகாவின் தோழி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, யாஷிகா உள்ளிட்ட 3 பேரும் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிவேகத்தில் யாஷிகா…சத்தமாக பாட்டு போட்டு  நண்பர்களுடன் ஆட்டம்…அதிர வைக்கும் சிசிடிவி காட்சி!!

இந்நிலையில் யாஷிகா மணிக்கு 140 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் காரை ஓட்டி வந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாஷிகா ஓட்டி வந்த கார் மேல் பக்கமாக திறக்கக் கூடிய வசதி கொண்டது . இந்த காரில் அதிக சத்தத்துடன் பாடல்களை ஒலிக்கவிட்டு நான்கு பேரும் கூச்சலிட்டுக் கொண்டு காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது அவரது தோழி பவானி மேல்கூரை திறப்பை பயன்படுத்தி நின்றவாறு வந்துள்ளார். அப்போது பவானியின் துணி யாஷிகாவின் முகத்தில் பட்டு அவரின் கண்களை மறைத்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

அதிவேகத்தில் யாஷிகா…சத்தமாக பாட்டு போட்டு  நண்பர்களுடன் ஆட்டம்…அதிர வைக்கும் சிசிடிவி காட்சி!!

இதனால் பதற்றமடைந்த யாஷிகா கட்டுப்பாட்டிலிருந்து விலகி கார் விபத்து ஏற்பட்டு இருக்கும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.இத்துடன் யாஷிகா காரோட்டி செல்வது போல சில சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இருப்பினும் அந்த பக்கத்தில் உள்ள சிசிடிவிக்கள், காவல்துறை சிசிடிவிக்கள் இன்னும் வெளியிடவில்லை.