உலக டெஸ்ட் கோப்பையை வெல்லும் அணிக்கு இத்தனை கோடியா? – வாயைப் பிளக்கும் ரசிகர்கள்!

 

உலக டெஸ்ட் கோப்பையை வெல்லும் அணிக்கு இத்தனை கோடியா? – வாயைப் பிளக்கும் ரசிகர்கள்!

சமீப ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட் மீதான மக்களின் ஆர்வம் குறைந்துகொண்டே போவதால், டெஸ்ட் போட்டிகளை ஊக்குவிக்கும் விதமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை நடத்த ஐசிசி அறிவிப்பு வெளியிட்டது. ஒன்பது அணிகள் இத்தொடரில் பங்கேற்றுள்ளன. இரண்டு ஆண்டுகளில் ஒவ்வொரு அணியும் ஆறு தொடர்களில் (சொந்த மண்ணில் 3, அயல்நாட்டில் 3) விளையாட வேண்டும்.

உலக டெஸ்ட் கோப்பையை வெல்லும் அணிக்கு இத்தனை கோடியா? – வாயைப் பிளக்கும் ரசிகர்கள்!

ஒவ்வொரு தொடரிலும் 2 முதல் 5 போட்டிகளை நடத்தலாம். ஒவ்வொரு தொடருக்கும் 120 புள்ளிகள் ஒதுக்கப்படும். போட்டிகளின் எண்ணிக்கை மற்றும் முடிவுகளின் படி புள்ளிகள் பிரித்தளிக்கப்படும். புள்ளிகளின் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதும். அப்போட்டி டிரா ஆகும் பட்சத்தில் இரு அணிகளும் சாம்பியனாக அறிவிக்கப்படும். இவ்வாறான விதிமுறைகளை ஐசிசி வகுத்து தொடரை நடத்த திட்டமிட்டிருந்தது.

உலக டெஸ்ட் கோப்பையை வெல்லும் அணிக்கு இத்தனை கோடியா? – வாயைப் பிளக்கும் ரசிகர்கள்!

இந்தத் தொடர் 2019ஆம் ஆண்டு முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. கொரொனா தாக்கத்தால் போட்டிகள் நடத்தமுடியாமல் போனது. இதையடுத்து ஐசிசி உயர்மட்ட குழு கூடி புதிய விதிமுறைகளை வகுத்தது. அதன்படி, 85 சதவிகித போட்டிகளை மட்டுமே நடத்த முடியும் என்பதால், கொரோனாவால் நடத்தமுடியாமல் போன தொடர்களுக்கு டிராவுக்கான புள்ளிகள் வழங்கப்படும் என முடிவெடுக்கப்பட்டது. இதுபோன்ற பல்வேறு நெருக்கடிக்குப் பின் இறுதிப் போட்டிக்கு இந்தியாவும் நியுஸிலாந்து அணியும் தகுதிபெற்றன.

உலக டெஸ்ட் கோப்பையை வெல்லும் அணிக்கு இத்தனை கோடியா? – வாயைப் பிளக்கும் ரசிகர்கள்!

இரு அணிகளுக்கிடையேயான இறுதிப்போட்டி சௌதாம்ப்டனில் வரும் ஜூன் 18ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான அணிகள் அறிவிக்கப்பட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இச்சூழலில் வெற்றிபெறும் அணிக்கான பரிசுத் தொகையை ஐசிசி அறிவித்துள்ளது. அதன்படி கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.12 கோடி, வெற்றிவாய்ப்பை இழந்த அணிக்கு ரூ.6 கோடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக டெஸ்ட் கோப்பையை வெல்லும் அணிக்கு இத்தனை கோடியா? – வாயைப் பிளக்கும் ரசிகர்கள்!

3ஆம், 4ஆம், 5ஆம் இடங்களைப் பெற்ற அணிகளுக்கு முறையே ரூ.3.38 கோடி, ரூ.2.67 கோடி, ரூ.1.5 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்படவுள்ளது. அதேபோல போட்டியில் பங்கேற்ற எஞ்சிய நான்கு அணிகளுக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ.75 லட்சம் அளிக்கப்படுகிறது. முதல் முறையாக இந்த தொடர் நடைபெறுவதால் ஒருநாள்,டி20 உலகக்கோப்பை தொடருக்கு இணையாகக் கருதப்படுகிறது.