ஒரே நேரத்தில் இரு கைகளால் எழுதும் மாணவி- குவியும் பாராட்டுகள்!

 

ஒரே நேரத்தில் இரு கைகளால் எழுதும் மாணவி- குவியும் பாராட்டுகள்!

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், ஒரே நேரத்தில், இரண்டு கைகளையும் பயன்படுத்தி எழுதும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கண்களைக் கட்டிக் கொண்டு , இரண்டு கைகளால் எழுதுவதும் பார்ப்பவர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஒரே நேரத்தில் இரு கைகளால் எழுதும் மாணவி- குவியும் பாராட்டுகள்!

கர்நாடக மாநிலம், மங்களூருவில் கல்வி பயிற்சி நிறுவனம் நடத்தி வருபவர் கோபட்கர். அவரது மகள் ஆதிஸ்ரூபா(17). கோபட்கரின் பயிற்சி மையத்தில் தனித்திறனை வளர்த்து கொள்வதற்காக பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. பல மாணவர்களுக்கும் அளிக்கும் பயிற்சி போல, மகள் ஆதிஸ்ரூபாவுக்கும் தனிப் பயிற்சிகளை கோபட்கர் அளித்துள்ளார்.

இரு கைகளையும் பயன்படுத்தி எழுதும் பயிற்சியை கற்றுக் கொண்ட அதிஸ்ரூபா, கண்களைக் கட்டிக் கொண்டு எழுதும் பயிற்சியும் பெற்றுள்ளார். வலது கை எழுதும் வார்த்தையை இடது கை எழுதுவது, அதுபோல இரு கைகளிலும் வேறு வேறு வார்த்தைகளை ஒரே நேரத்தில் எழுதுவது என பல பயிற்சிகளை பெற்றுள்ளார்.

இதையடுடுத்து , இந்த திறமைகளை அங்கீகரிக்கும் உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஒரு கல்வி நிறுவனம் அதிஸ்ரூபாவுக்கு தேர்வு நடத்தியது. அப்போது, ஆதிஸ்ரூபா ஒரு நிமிடத்தில் இரு கைகளை பயன்படுத்தி 45 வார்த்தைகளை எழுதி சாதனை படைத்தார். இதற்கு முன் 25 வார்த்தைகள் எழுதியதே சாதனையாக இருந்த நிலையில், 45 வார்த்தைகள் எழுதியது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஒரே நேரத்தில் இரு கைகளால் எழுதும் மாணவி- குவியும் பாராட்டுகள்!

இதுகுறித்து மாணவி ஆதிஸ்ரூபா கூறுகையில், கடவுள் எனக்கு 10 விரல்கள் கொடுத்து உள்ளார். அந்த விரல்களை வைத்து நான் இன்னும் நிறைய சாதனை படைக்க வேண்டும் என ஆர்வமாக உள்ளேன் என கூறியுள்ளார். தற்போது பத்தாம் வகுப்பை தேர்வை எழுத உள்ள அவர், பள்ளிக்கூடமே செல்லவில்லையாம். தந்தையின் பயிற்சி மையத்திலேயே படித்து வருகிறார். இரண்டு கைகளையும் பயன்படுத்தி ஒரே நேரத்தில் எழுதும், அவரது வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.