எழுத்தாளர் கி.ரா.மறைவு : திருமாவளவன், தினகரன் இரங்கல்!

 

எழுத்தாளர் கி.ரா.மறைவு : திருமாவளவன், தினகரன் இரங்கல்!

எழுத்தாளர் கி.ரா. உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். கி.ரா. உடலுக்கு சொந்த ஊரான தூத்துக்குடி கோவில்பட்டி அருகே உள்ள இடைசெவலில் இறுதிச்சடங்கு நடைபெறும் என்றும் பிற்பகல் 1 மணிக்கு புதுச்சேரியிலிருந்து சொந்த ஊருக்கு கி.ரா.வின் உடல் எடுத்து செல்லப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனால் தமிழக அரசின் முழு அரசு மரியாதையுடன் கி.ரா. உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

எழுத்தாளர் கி.ரா.மறைவு : திருமாவளவன், தினகரன் இரங்கல்!

இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “முதுபெரும் தமிழ் எழுத்தாளர், கரிசல் இலக்கியத்தின் பிதாமகர், பெரியவர் திரு. கி.ராஜநாராயணன் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து வருத்தமடைந்தேன்.தமிழின் தனித்துவமான கதை சொல்லியாக, அழியாத படைப்புகளை தந்தவராக, நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடியாக திகழ்ந்த கி.ரா அவர்களின் மறைவு தமிழுக்கு பேரிழப்பாகும். அன்னாரது மறைவால் வாடும் உறவினர்கள், நண்பர்கள், வாசகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல் எம்.பி. திருமாவளவன், “நூறாண்டுகள் வாழ்ந்து நிறைவான பெருவாழ்வு கண்ட கரிசல்இலக்கியச்செம்மல்கி்ரா அவர்களுக்கு எமது செம்மாந்த வீரவணக்கம். மக்கள்மொழியில் இலக்கியம் படைத்து இலக்கிய மொழியின் மரபை உடைத்து கரிசல் மண்ணுக்குப் பெருமைசேர்த்த கனித்தமிழின் #காலக்கொடை! வாழ்க அவர் புகழ். வெல்ககரிசல்தமிழ்.” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.