குமரி அருகே விஷ வண்டுகள் கடித்து தொழிலாளி பலி!

 

குமரி அருகே விஷ வண்டுகள் கடித்து தொழிலாளி பலி!

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டம் தாழக்குடி அருகே விஷ வண்டுகள் கடித்ததில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டம் தாழக்குடி அடுத்த கனகமூலம் புதுகுடியிருப்பை சேர்ந்தவர் ராஜா (52). மரம் ஏறும் தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு திருமணமான 2 மகள்கள் உள்ளனர். சம்பவத்தன்று ராஜா, வீட்டின் அருகில் உள்ள தென்னை மரத்தில் தேங்காய் பறிப்பதற்காக ஏறி உள்ளார். இந்த நிலையில் மரத்தில் விஷ வண்டுகள் கூடு கட்டி உள்ளது.

குமரி அருகே விஷ வண்டுகள் கடித்து தொழிலாளி பலி!

இதனை கவனிக்காமல் ராஜா தேங்காய்களை பறித்தபோது, அவரை விஷ வண்டுகள் கூட்டமாக சூழ்ந்து கொண்டு கொட்டி உள்ளன. உடல் முழுவதும் வண்டுகள் கொட்டியதால் வலி தாங்க முடியாத ராஜா, உடனடியாக மரத்தில் இருந்து கீழே இறங்கினார். பின்னர், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த நிலையில், நேற்று ராஜாவுக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டது.

இதனை அடுத்து, அவரை உறவினர்கள் மீட்டு பூதப்பாண்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து, லட்சுமி அளித்த புகாரின் பேரில் ஆரல்வாய்மொழி போலீசார், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.