ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் போர் கப்பலை தாக்கி அழித்த ரஷ்ய படைகள்..

 
ஒப்பந்தத்தை மீறி  உக்ரைன் போர் கப்பலை தாக்கி அழித்த ரஷ்ய படைகள்..

 ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் போர்க்கப்பலை  ரஷ்ய படைகள் தாக்கி அழித்ததது காட்டுமிராண்டிதனமான செயல் என உக்ரைன்  அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார்.  

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 150 நாட்களை கடந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது.  தானியங்கள் ஏற்றுமதியில் முக்கிய  பங்கு வகிக்கும் உக்ரைனில்  கடந்த 5 மாதங்ளாக தொடரும் போரால், பிற நாடுகளுக்கு தானியங்கள் கொண்டு செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது.  இதனால் சர்வதேச அளவில் உணவு நெருக்கடி  ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து  தானிய ஏற்றுமதியை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சியை ஐ.நா முன்னெடுத்திருந்தது. அதன் பயனாக , கடந்த வெள்ளிக்கிழமை அன்று ரஷ்யாவும் - உக்ரைனும் தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.  அதில்,  கருங்கடல் பகுதியில் உள்ள உக்ரைன் துறைமுகங்கள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என ரஷ்யா உறுதியளித்திருந்தது.  

ஒப்பந்தத்தை மீறி  உக்ரைன் போர் கப்பலை தாக்கி அழித்த ரஷ்ய படைகள்..

ஆனால் ஒப்பந்தம் கையெழுத்தான சில மணி நேரங்களிலேயே , உக்ரைனின் ஒடேசா துறைமுகம் மீது ரஷ்யா  தாக்குதல் நடத்தியது. சரமாரியாக  ஏவுகனைகளை வீசி  தாக்கியதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் தாக்குதலால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.  மேலும் ஒப்பந்தத்தை மீறி  ரஷ்யா நடத்திய இந்த தாக்குதலுக்கு ஐ.நா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  ஒடேசா துறைமுகத்தில் ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதாக, ஒப்புகொண்டுள்ள ரஷிய ராணுவம்,  நேற்று முன்தினம் ஒடேசா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த உக்ரைனின் போர் கப்பல் அழிக்கப்பட்டதாக ரஷியா தெரிவித்திருக்கிறது.  

ஒப்பந்தத்தை மீறி  உக்ரைன் போர் கப்பலை தாக்கி அழித்த ரஷ்ய படைகள்..

அதுமட்டுமின்றி,  ஓடேசா  துறைமுகத்தில் அமெரிக்காவால் வழங்கப்பட்ட கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் சேகரித்து வைக்கப்பட்டிருந்த ஆயுத கிடங்கும் தாக்கி நிர்மூலமாக்கப்பட்டதாக  தெரிவித்துள்ளது.  இந்நிலையில் ஒப்பந்தத்தை மீறி ஒடேசா துறைமுகம் மீது ரஷியா தாக்குதல் நடத்தியது காட்டுமிராண்டித்தனம் என  உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சாடியுள்ளார்.  இந்த தாக்குதல் ரஷியாவுடனான  பேச்சுவார்த்தைக்கான சாத்தியத்தையே  அழித்துவிட்டதாக  கூறிய ஜெலன்ஸ்கி,  ஒப்பந்தம் மீறப்பட்டிருந்தாலும்  தானிய ஏற்றுமதியை மீண்டும் தொடங்குவதற்கான ஏற்பாடுகள்  செய்யப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.