கோத்தபய பதவி விலக காத்திருக்கும் எதிர்கட்சிகள்..!! அனைத்துக் கட்சி ஆட்சி அமைக்க முடிவு,,

 
கோத்தபய பதவி விலக காத்திருக்கும் எதிர்கட்சிகள்..!! அனைத்துக் கட்சி ஆட்சி அமைக்க முடிவு,,

இலங்கையில் நாளை மறுநாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே அதிகாரப்பூர்வமாக  தனது பதவியை ராஜினாமா செய்த பிறகு, அங்கு அனைத்துக் கட்சி கூட்டணி ஆட்சி அமைக்க எதிர்க்கட்சிகள்   முடிவு செய்துள்ளன.  

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு  ராஜபக்சே குடும்பமே காரணம் என , அரசுக்கு எதிராக மக்கள் கடந்த 3 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.  மக்கள் போராட்டம் வெடித்ததும், மஹிந்த ராஜபக்சே தலைமையிலான அரசு பதவி விலகி, ரணில் விக்ரமசிங்கே புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார்..  ஆனால் அதன்பிறகும் அங்கு  பிரச்சனைகளும், நெருக்கடிகளும் குறைந்தபாடில்லை..   மக்கள் போராட்டமும் முடிவுக்கு வரவில்லை.   நேற்று முன்தினம் மக்கள் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியது.  அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள், பாதுகாப்பு வீரர்களை மீறி அதிபர் மாளிகைக்குளும்  நுழைந்தனர்.   இதனையடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பத்தினருடன் தப்பியோடினார்.  உயிருக்கு பயந்து தலைமறைவாகியிருக்கும்  கோத்தபய எங்கிருக்கிறார் என்கிற விவரம் வெளியாகவில்லை..

கோத்தபய பதவி விலக காத்திருக்கும் எதிர்கட்சிகள்..!! அனைத்துக் கட்சி ஆட்சி அமைக்க முடிவு,,

இதனைத் தொடர்ந்து போராட்டக்காரகள்  பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்ட நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே வீட்டிற்கும் தீ வைத்தனர். மக்களின் கோபத்தால், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும் பதவி விலகினார்.  4 அமைச்சர்களும் அடுத்தடுத்து பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால், இலங்கையில் அரசு நிர்வாகம் தடுமாற்றம் கண்டுள்ளது. தப்பி ஓடிய அதிபர் கோத்தபய,  நாளை மறுதினம் அதிகாரப்பூர்வமாக   ராஜினாமா அறிவிப்பை வெளியிடுவார் என  சபாநாயகர் அபேவர்தன  தெரிவித்திருக்கிறார்.    நேற்று முன்தினம் நடத்தப்பட்ட  அவசர அனைத்து கட்சிக் கூட்டத்தில், சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன அதிபர் பொறுப்புகளை இடைக்காலமாக கவனிக்கவும், விரைவில் அனைத்து கட்சிகள் அடங்கிய கூட்டணி ஆட்சி அமைக்கவும்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோத்தபய பதவி விலக காத்திருக்கும் எதிர்கட்சிகள்..!! அனைத்துக் கட்சி ஆட்சி அமைக்க முடிவு,,

எனவே, நாளை மறுதினம் அதிபர் கோத்தபய பதவி விலகுவதாக அறிவித்துள்ளதால்,  எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் நேற்றும் ஆலோசனை நடத்தினர். இதில், ஐக்கிய மக்கள் சக்தி, ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி, முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.  இதில், அனைத்துக் கட்சிகள் அடங்கிய கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக  முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே,  கோத்தபய அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்யும் வரையில்  போராட்டம் தொடரும் என அறிவித்துள்ள  போராட்டக்காரர்கள் , தொடர்ந்து அதிபர் மாளிகையிலேயே முகாமிட்டுள்ளனர்.