டுவிட்டர் ஊழியர்களை பணிநீக்கம் செய்தது ஏன்? - எலான் மஸ்க் புது விளக்கம்!

 
elon musk

டுவிட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கான காரணத்தை எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். 

உலகின் நம்பர் ஒன் பணக்காரரான  எலான் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தி வருகிறார். இந்நிலையில்,  கடந்த ஏப்ரல் மாதம் 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டரை வாங்கவிருப்பதாக எலான் மஸ்க் அறிவித்திருந்தர்.  பின்னர் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவை கைவிடப்போவதாக அறிவித்தார்.  அதன்பிறகு  ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தை நாடியதால்,  மீண்டும் நானே  வாங்கிக் கொள்கிறேன் என்று கூறினார். இதனையடுத்து கடந்த வியாழக்கிழமை  ட்விட்டர் நிறுவனத்தை முழுவதுமாக கைப்பற்றினார்.  இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்த உடனே, முதல் வேலையாக  ட்விட்டர் சிஇஓ பராக் அகர்வாலை பணி நீக்கம் செய்தார். அவர் மட்மின்றி  ட்விட்டரில் தலைமை நிதி அதிகாரி நெட் சேகல், சட்டத்துறை தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல் என உயர் அதிகாரிகள் பலரையும் அடுத்தடுத்து அதிரடியாக  பணி நீக்கம் செய்தார். மேலும் பணி நீக்கம் செய்யப்பட வேண்டிய தொழிலாளர்களின் பட்டியலை அளிக்க மேலாளர்களுக்கு எலான் மஸ்க் உத்தரவிட்டு இருந்தார். சுமார் 3700 ஊழியர்களை பணி நீக்க செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில்,  அந்தச் செய்திகள் அனைத்தும் உண்மைதான் என்பது  நேற்று நிரூபணம் ஆனது. எதிர்பார்த்ததை விடவும் மிக வேகமாகப் பலருக்குப் பணி நீக்க உத்தரவு அனுப்பப்பட்டது.

Elon musk

எந்த முன்னறிவிப்புமின்றி இப்படி திடீரென பணி நீக்கம் செய்யும் எலான் மஸ்க்கின் நடவடிக்கைக்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன. அதைத் தொடர்ந்து ஏன் இப்படி ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதற்கு விளக்கமளித்திருக்கிறார் எலான் மஸ்க். டுவிட்டர் நிறுவனத்துக்கு ஒவ்வொரு நாளும் $4 மில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படுகிறது. ஆகவே ஆட்குறைப்பு செய்வதைத்தவிர வேறு வழியில்லை. அவர்களுக்கு மூன்று மாதங்களுக்கான பணி நீக்க ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. இது சட்டப்படி தேவைப்படுவதை விட 50% அதிகமானது. இவ்வாறு எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.