காந்தி மார்க்கெட்டை திறக்கக் கோரி தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம்!

 

காந்தி மார்க்கெட்டை திறக்கக் கோரி தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம்!

திருச்சி

திருச்சியில் கொரோனாவால் மூடப்பட்ட காந்தி மார்க்கெட்டை திறக்க வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுமைப்பணி தொழிலாளர்கள் மற்றும் சில்லறை வியாபாரிகள் குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, காந்தி மார்க்கெட்டை திறக்க நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தும், இதுவரை திறக்கப்படவில்லை என தெரிவித்த தொழிலாளர்கள், நீதிமன்ற வழிகாட்டுதலின் படி விரைவில் காந்தி மார்க்கெட்டை திறக்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுகொண்டனர்.

காந்தி மார்க்கெட்டை திறக்கக் கோரி தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம்!

மேலும், வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கவும் வலியுறுத்திய அவர்கள், இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காவிட்டால், அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுமக்களை திரட்டி போராட்டங்கள்
நடத்தப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.