வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் தொழிலாளி பலி!
தென்காசி
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் கட்டுமான பணியின்போது வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த முத்துகிருஷ்ணபேரி கிராமத்தை சேர்ந்தவர் பலவேசமுத்து. இவரது மகன் சக்திவேல்(20). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் ஆலங்குளம் ஜோதி நகரில் சங்கர் என்பவருக்கு சொந்தமான வீட்டை இடித்துவிட்டு புதிதாக கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
கட்டிடத்தை இடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சக்திவேலின் மீது ஜன்னல் சுவர் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து, சக ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில் ஆலங்குளம் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.