மழையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் கூலி தொழிலாளி பலி!

 

மழையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் கூலி தொழிலாளி பலி!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் மழையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் கூலி தொழிலாளி உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் தவமணி (45). கூலி தொழிலாளி. இவரது மனைவி தேவயானி. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில், நேற்று இரவு தேவயானி, தனது குழந்தைகளுடன் உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் தவமணி மட்டும் நேற்றிரவு தனது ஓட்டு வீட்டில் படுத்து தூங்கி உள்ளார்.

மழையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் கூலி தொழிலாளி பலி!

இதனிடையே, ராயக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதகளில் நேற்றிரவு முதல் விடிய விடிய சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. மழையில் நினைந்து வீட்டின் சுவர் சேதமடைந்த நிலையில், இன்று அதிகாலை எதிர்பாராத விதமாக தவமணி மீது சுவர் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி தவமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இன்று காலை சுவர் இடிந்து கிடப்பதை கண்ட அந்த பகுதி மக்கள் சென்று பார்த்தபோது, தவமணி உயிரிழந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து, அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் ராயக்கோட்டை போலீசார், தவமணி உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.