கிணறு தோண்டியபோது வெடி விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

 

கிணறு தோண்டியபோது வெடி விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

ராசிபுரம் அருகே கிணற்றை ஆழப்படுத்தும் பணியின்போது ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வடுகம் கைலாசம்பாளைம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி துரைசாமி.

கிணறு தோண்டியபோது வெடி விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு


இவரது தோட்டத்தில் உள்ள கிணற்றை ஆழப்படுத்தும் பணியில் ராசிபுரத்தை சேர்ந்த பழனிசாமி உள்ளிட்ட 5 தொழிலாளர்கள் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று கிணற்றில் உள்ள பாறைகளை வெடிவைத்து தகர்க்கும் பணியில் ஈடுபட்டபோது, சிலம்பன் என்பவர் கிணற்றை எட்டிபார்த்துள்ளார். அப்போது, அவர் மீது பாறைகள் வெடித்து சிதறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த சிலம்பன் கிணற்றில் விழுந்து உடல் சிதைந்து உயிரிழந்தார்.

கிணறு தோண்டியபோது வெடி விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு


தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் மற்றும் நாமகிரி காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி விசாரிணை மேற்கொண்டு வருகின்றனர்.