பந்தலூர் அருகே காட்டுயானை தாக்கி தொழிலாளி பலி!

 

பந்தலூர் அருகே காட்டுயானை தாக்கி தொழிலாளி பலி!

நீலகிரி

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே காட்டுயானை தாக்கி தேயிலை தோட்ட தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தலுகா கொள்ளப்பள்ளி குறிஞ்சி நபரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (37). தேயிலை தோட்ட தொழிலாளி. இவர் நேற்ற அந்த பகுதியில் நடை பயிற்சிக்கு சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக புதரில் மறைந்திருந்த காட்டுயானை ஒன்று பாலகிருஷ்ணனை தாக்கியுள்ளது.

பந்தலூர் அருகே காட்டுயானை தாக்கி தொழிலாளி பலி!

இதனால் அவர் அலறி துடித்த நிலையில், சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்றனர். அதற்குள்ளாக யானை பாலகிருஷ்ணனை காலினால் மிதித்ததில் அவர் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து, பொதுமக்கள் ஓலி எழுப்பி காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். தொடர்ந்து, பாலகிருஷ்ணனை மீட்டு பந்தலூர் அருசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், பாலகிருஷ்ணன் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக கூறினார். தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், வனத்துறை சார்பில், உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டது.