தார் கலவை இயந்திரத்தில் தவறி விழுந்து தொழிலாளி பலி!

 

தார் கலவை இயந்திரத்தில் தவறி விழுந்து தொழிலாளி பலி!

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே தார் கலவை இயந்திரத்தில் தவறி விழுந்து சாலை பணியாளர் உடல் கருகி பரிதாபமாக உயிரிந்தார். மேலும், படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திண்டுக்கல் மாவட்டம் கடவூர் அடுத்த அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் காளியப்பன். சாலை பணியாளர். இவரது மனைவி நாகமணி. இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில், வடமதுரை அருகே உள்ள குப்பமுத்துபட்டியில் தார் சாலை அமைக்கும் பணியில், காளியப்பன் மற்றும் புத்தாநத்தம் பகுதியை சேர்ந்த சின்னதுரை ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

தார் கலவை இயந்திரத்தில் தவறி விழுந்து தொழிலாளி பலி!

அப்போது, எதிர்பாராத விதாக காளியப்பன் தார் கலவை இயந்திரத்தில் தவறி விழுந்தார். அப்போது, இயந்திரம் திடீரென தீப்பற்றி எரிந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். காளியப்பனை மீட்க முயன்ற சின்னதுரைக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அவரை சக ஊழியர்கள் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சின்னதுரைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தார்ச்சாலை அமைக்கும் பணியின்போது தார் இயந்திரத்தில் விழுந்து
ஊழியர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.