வீட்டின் மேற்கூரையில் இருந்து தவறிவிழுந்து தொழிலாளி பலி

 

வீட்டின் மேற்கூரையில் இருந்து தவறிவிழுந்து தொழிலாளி பலி

மதுரை

மதுரையில் பணியின்போது வீட்டின் மேற்கூரையில் இருந்து தவறிவிழுந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

மதுரை கே.புதூர் பாண்டியன் நகரில் வசித்து வருபவர் மணிகண்டன். இவர் தனியார் கட்டுமான நிறுவனத்தில் ஆஸ்பெஸ்டாஸ் கூரை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் இன்று மதுரை அடுத்த ஆத்திகுளம் குழந்தை ஏசு தெருவில் உள்ள வீட்டிற்கு ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

வீட்டின் மேற்கூரையில் இருந்து தவறிவிழுந்து தொழிலாளி பலி

அப்போது, எதிர்பாராத விதமாக கால் வழுக்கி மேற்கூரையில் இருந்து தவறி விழுந்தார். இதில் அவர் தலையில் பலத்த காயமடைந்தார். உடனிருந்தவர்கள் அவரை மீட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வந்த நிலையில், மணிகண்டன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.