விருதுநகர் பட்டாசு ஆலையில் திடீர் தீ விபத்து.. தீயில் சிக்கி படுகாயம் அடைந்த ஊழியர்!

 

விருதுநகர் பட்டாசு ஆலையில் திடீர் தீ விபத்து.. தீயில் சிக்கி படுகாயம் அடைந்த ஊழியர்!

தமிழகத்தில் கொரோனா வைரசால் அனைத்து தொழிற்சாலைகளும் கிட்டத்தட்ட 2 மாதங்களாக மூடப்பட்டிருந்தது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், முதற்கட்ட ஊரடங்கு தளர்வின் போது சிறு, குறு தொழில்களுக்கு அரசு அனுமதி அளித்தது. அப்போது விருதுநகரில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. அதன் பிறகு பட்டாசு ஆலைகள் இயங்கி வரும் நிலையில், இன்று ஆம்பத்தூர் அருகே சோனி பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.

விருதுநகர் பட்டாசு ஆலையில் திடீர் தீ விபத்து.. தீயில் சிக்கி படுகாயம் அடைந்த ஊழியர்!

சான்றிதழ் பெற்று பேன்சி ரக வெடிகள் தயாரிக்கப்பட்டு வரும் இந்த ஆலையில், மருந்து கலவை உராய்வால் ஏற்பட்ட விபத்தில் ஒரு அறை முற்றிலுமாக சேதமடைந்தது. அப்போது அங்கிருந்த கருப்பசாமி என்ற ஊழியர், தீயில் சிக்கி பலத்த காயம் அடைந்துள்ளார். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து அப்பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.