கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி!

 

கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி!

மதுரை

மதுரை அருகே கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை திருப்பரங்குன்றம் நடுத்தெருவை சேர்ந்தவர் லட்சுமண குமார்(35). கட்டுமான தொழிலாளர். இவருக்கு திருமணமாகி ஜோதி என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில், செல்லூர் பாலம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் நேற்று லட்சுமண குமார் பணியில் ஈடுபட்டு இருந்தார்.

கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி!

அப்போது, எதிர்பாராத விதமாக கால் தவறி மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த லட்சுமண குமாரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார்.

இது குறித்து தகவலின் பேரில் செல்லூர் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.