ஈரோடு அருகே மண்சரிவில் சிக்கி தொழிலாளி பரிதாப மரணம்!

 

ஈரோடு அருகே மண்சரிவில் சிக்கி தொழிலாளி பரிதாப மரணம்!

தமிழகத்தில் கனமழையின் காரணமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. குறிப்பாக தேனி, ஈரோடு, கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. அதனால் இன்று காலை முல்லை பெரியாறு அணையில் இருந்து பாசனத்துக்காக அம்மாவட்ட ஆட்சியர் நீர் திறந்து விட்டார். சுமார் 120 நாட்களுக்கு அணையில் இருந்து நீர் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் மழையால் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

ஈரோடு அருகே மண்சரிவில் சிக்கி தொழிலாளி பரிதாப மரணம்!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அந்த மண்சரிவில் தொழிலாளி ஒருவரை சிக்கிக் கொண்டுள்ளார். அவரை மீட்க அனைத்து ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டன. ஆனால்,அதற்குள் மண் சரிவில் சிக்கிய தொழிலாளி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.