ஆலை தடுப்பு சுவர் இடிந்து விழுந்து விபத்து: வடமாநில தொழிலாளி பலி!

 

ஆலை தடுப்பு சுவர் இடிந்து விழுந்து விபத்து: வடமாநில தொழிலாளி பலி!

ஓசூர் அருகே தொழிற்சாலையில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சிப்காட் 1-ல் தனியார் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. வழக்கம் போல இன்று காலை பணிக்கு ஆலைக்கு பணிக்கு திரும்பிய ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென ஆலையின் தடுப்பு சுவர் இடிந்து விழுந்திருக்கிறது. அச்சமயம் தடுப்பு சுவர் அருகே நின்று கொண்டிருந்த வடமாநில தொழிலாளி, இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும், 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

ஆலை தடுப்பு சுவர் இடிந்து விழுந்து விபத்து: வடமாநில தொழிலாளி பலி!

தகவல் அறிந்து வந்த போலீசார், உயிரிழந்த தொழிலாளியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆலை உரிமையாளரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.