வீடு கட்டும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி மின்சாரம் தாக்கி பரிதாப பலி!

 

வீடு கட்டும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி மின்சாரம் தாக்கி பரிதாப பலி!

சோளிங்கர் அருகே கட்டட பணியில் ஈடுபட்ட தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல்(45). இவர் திருத்தணியில் புதிதாக வீடு ஒன்றை கட்டி வருகிறார். அதன் கட்டுமான பணியில் தெக்கலூர் கிராமத்தை சேர்ந்த சதாசிவம்(40) என்பவர் ஈடுபட்டு வந்தார். அந்த கட்டுமான பணிக்கு தண்ணீர் தேவைப்பட்டதால், அப்பகுதிக்கு அருகே உள்ள ஆழ்துளை கிணறு மூலம் இணைக்கப்பட்டிருந்த மோட்டாரில் சதாசிவம் பைப்பை இணைந்திருக்கிறார். அப்போது, எதிர்பாராத விதமாக மின்கசிவு ஏற்பட்ட நிலையில் தண்ணீர் வழியாக மின்சாரம் பாய்ந்து சதாசிவம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

வீடு கட்டும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி மின்சாரம் தாக்கி பரிதாப பலி!

மின்சாரம் தாக்கி சதாசிவம் உயிரிழந்த சம்பவம் சக தொழிலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து வந்த போலீசார், சதாசிவத்தின் உடலை மீட்டு திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்துள்ளனர். உயிரிழந்த சதாசிவத்திற்கு ஒரு சோனியா மற்றும் சூர்யா ஆகிய இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு குழந்தைகளை பரிதவிக்க விட்டுச் சென்ற சதாசிவத்தின் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.