கணவரின் ஆக்சிஜன் குழாயை அகற்றிய மருத்துவர்… கதறிய மனைவி – மனித உரிமை ஆணையம் அரசுக்கு அதிரடி உத்தரவு!

 

கணவரின் ஆக்சிஜன் குழாயை அகற்றிய மருத்துவர்… கதறிய மனைவி – மனித உரிமை ஆணையம் அரசுக்கு அதிரடி உத்தரவு!

ஆக்சிஜன் குழாயை அகற்றியதால் கொரோனா பாதித்த தனது கணவர் மரணமடைந்ததாக கடலூர் பெண் கூறிய புகார் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு மருத்துவ மற்றும் ஊரக சுகாதார பணிகள் இயக்குநருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கணவரின் ஆக்சிஜன் குழாயை அகற்றிய மருத்துவர்… கதறிய மனைவி – மனித உரிமை ஆணையம் அரசுக்கு அதிரடி உத்தரவு!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ராஜா. இவர் கொரோனா தொற்று பாதித்து கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த மாதம் 20ஆம் தேதி அவர் இறந்து விட்டார். இந்நிலையில், மருத்துவர் ஒருவர் தனது கணவருக்கு பொருத்தப்பட்டிருந்த ஆக்சிஜன் குழாயை அகற்றியதால் இறந்து விட்டதாகக் கூறி, ராஜாவின் மனைவி கயல் விழி கதறி அழுதபடி வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார்.

கணவரின் ஆக்சிஜன் குழாயை அகற்றிய மருத்துவர்… கதறிய மனைவி – மனித உரிமை ஆணையம் அரசுக்கு அதிரடி உத்தரவு!

அதில், சம்பந்தப்பட்ட மருத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டிருந்தார். இதுசம்பந்தமாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம். இதுகுறித்து நான்கு வாரங்களில் அறிக்கை அளிக்க தமிழ்நாடு மருத்துவ மற்றும் ஊரக சுகாதார பணிகள் இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளார்.