‘மனைவியும் மாமியாரும் தான் காரணம்’ கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கில் தொங்கிய தொழிலாளி!

 

‘மனைவியும் மாமியாரும் தான் காரணம்’ கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கில் தொங்கிய தொழிலாளி!

குடும்பத் தகராறில் கூலித் தொழிலாளி கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டம் சாமிதோப்பு அருகே வசித்து வந்த தம்பதி நாகராஜன் (48)- கவிதா (45). இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். வெல்டிங் தொழிலாளியாக பணியாற்றி வந்த நாகராஜனுக்கு மது பழக்கம் இருந்துள்ளது. இதனால் நடராஜனுக்கு கவிதாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது.

‘மனைவியும் மாமியாரும் தான் காரணம்’ கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கில் தொங்கிய தொழிலாளி!

இந்த நிலையில், நேற்று நடராஜனின் வீடு திறக்கப்படாமல் இருந்ததால் குழப்பமடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியே எட்டி பார்த்துள்ளனர். அப்போது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், நாகராஜனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, நாகராஜன் எழுதி வைத்திருந்த 8 பக்க கடிதம் போலீசார் வசம் சிக்கியுள்ளது.

அதில், என் மரணத்திற்கு மனைவியும் மாமியாரும் தான் காரணம் என்றும் மாமியாரால் தான் அடிக்கடி எங்களுக்குள் சண்டை வந்தது என்றும் எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளார்.