தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகைகள் கொள்ளை!

 

தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகைகள் கொள்ளை!

மதுரை

திருமங்கலம் அருகே தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள சித்தாலை பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (42). இவர் தமிழ்நாடு திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஜெயலட்சுமி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.

தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகைகள் கொள்ளை!

சம்பவத்தன்று சுந்தரராஜ் மற்றும் ஜெயலட்சுமி ஆகியோர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு, வேலைக்கு சென்றனர். பணி முடிந்து ஜெயலட்சுமி மாலை வீட்டிற்கு வந்தபோது, கதவு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 50 சவரன் தங்க நகைகள் மற்றும் 80 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து ஜெயலட்சுமி தெரிவித்த தகவலின் பேரில், சுந்தர்ராஜ், திருமங்கலம் தாலுகா காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்ட போலீசார், கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.