“அடுத்தவன் என்னை தொடக்கூடாதுன்னு இப்படியா பண்ணுவே” -முன்னாள் காதலனால் பெண்ணுக்கு நேர்ந்த கதி

 

“அடுத்தவன் என்னை தொடக்கூடாதுன்னு இப்படியா பண்ணுவே” -முன்னாள் காதலனால் பெண்ணுக்கு நேர்ந்த கதி

ஒரு பெண்ணின் முன்னாள் காதலன் அந்த பெண்ணை நடுரோட்டிலேயே அடிவயிற்றில் கத்தியால் குத்தி விட்டு ஓடிய சம்பவம் அந்த சாலையில் பரபரப்பை உண்டு பண்ணியுள்ளது

“அடுத்தவன் என்னை தொடக்கூடாதுன்னு இப்படியா பண்ணுவே” -முன்னாள் காதலனால் பெண்ணுக்கு நேர்ந்த கதி

மும்பையின் அந்தேரி கிழக்குப் பகுதியின் சாகி நாகா பகுதியில் வசிக்கும் ஒரு 22 வயதான பெண், அர்ஜுன் சிங் என்ற 26 வயதான வாலிபரை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்தார் .அதன் பிறகு இருவரும் ஒரு ஆண்டு கல்யாணம் செய்யாமல் குடும்பம் நடத்தி வந்துள்ளார்கள்.அதன் பிறகு அந்த அர்ஜுன் சிங் போதைக்கு அடிமையானார் .அவர் கஞ்சா மற்றும் மது அருந்திவிட்டு எந்த வேலைக்கும் போகாமல் வெட்டியாக ஊர் சுற்றி வந்துள்ளார் .அதனால் அந்த பெண் அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார் .

அதன் பிறகு அந்த பெண்  ஒரு பேக்கேஜிங் நிறுவனத்தில் வேலைக்கு சென்று வந்தார் .இந்நிலையில் கடந்த வாரம் அந்த பெண்ணின் முன்னாள் காதலன் அர்ஜுன் சிங் மீண்டும்  அவரின் வாழ்வில் குறுக்கே வந்தார் ,அந்த பெண் கடந்த சனிக்கிழமையன்று மாலை  சாகி நாகா பகுதியில் உள்ள சாலையில் சென்று கொண்டிருந்த போது அந்த அர்ஜுன் சிங் குடிப்போதையில் அந்த பெண்ணின் கையை பிடித்து இழுத்தார் .பின்னர் தன்னை தவிர வேறு யாரோடும் அந்த பெண்ணை வாழ விடமாட்டேன் என்று கூறி கத்தியை எடுத்து அந்த பெண்ணின் அடிவயிற்றில் குத்தி விட்டு ஓடிவிட்டார் .

இந்த தாக்குதலில்  காயமடைந்திருந்த   அந்த பெண்ணின் தந்தை அந்த பெண்ணை  அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார் .மறுநாள் அந்த வாலிபர் அர்ஜுன் சிங்க் போலீசில் சரணடைந்தார் .இப்போது அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரை  குத்திய சிங் மீது வழக்கு பதிந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். 

“அடுத்தவன் என்னை தொடக்கூடாதுன்னு இப்படியா பண்ணுவே” -முன்னாள் காதலனால் பெண்ணுக்கு நேர்ந்த கதி