“ஆ.ராசாவால் எடப்பாடிக்கு கொத்தாக விழும் பெண்கள் வாக்கு” – ஸ்டாலினுக்கு சென்ற ‘ஐபேக்’ உளவு ரிப்போர்ட்?

 

“ஆ.ராசாவால் எடப்பாடிக்கு கொத்தாக விழும் பெண்கள் வாக்கு” – ஸ்டாலினுக்கு சென்ற ‘ஐபேக்’ உளவு ரிப்போர்ட்?

அரசியல் தேர்தல் களத்தில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியது ஆ.ராசாவின் பேச்சு தான். முதல்வர் எடப்பாடியின் தாயார் குறித்து இழிவாகப் பேசியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. கட்சி பாகுபாடின்றி எடப்பாடிக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவளித்து ஆ.ராசாவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினர். அதிமுகவைச் சேர்ந்த மகளிரணியினர் ராசாவின் உருவபொம்மையைக் கொளுத்தியும் செருப்பால் அடித்தும் எதிர்ப்பைப் பதிவுசெய்தனர்.

“ஆ.ராசாவால் எடப்பாடிக்கு கொத்தாக விழும் பெண்கள் வாக்கு” – ஸ்டாலினுக்கு சென்ற ‘ஐபேக்’ உளவு ரிப்போர்ட்?

கடும் எதிர்ப்பலை எழுந்ததையடுத்து திமுக தலைவர் ஸ்டாலின், மகளிரணி செயலாளர் கனிமொழி ஆகியோர் கண்டித்தனர். இதற்கு நடுவே பிரச்சாரத்திற்குச் சென்ற எடப்பாடி, எனது தாயார் குறித்து ஆ.ராசா பேசியதற்கு கடவுள் தண்டனை கொடுப்பார் என்று கூறி உடைந்து அழுதுவிட்டார். இதன்பின் ஆ.ராசா பகீரங்கமாக முதல்வரிடம் மன்னிப்பு கேட்டார். இச்சூழலில் கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலும் திமுகவுக்குச் சாதகமாக வந்துகொண்டிருந்த நிலையில், இவ்விவகாரத்துக்குப் பின் பின்னடைவு ஏற்பட்டதாக ஸ்டாலினுக்கு ரகசிய மெயில் ஒன்று சென்றதாகக் கூறப்படுகிறது.

“ஆ.ராசாவால் எடப்பாடிக்கு கொத்தாக விழும் பெண்கள் வாக்கு” – ஸ்டாலினுக்கு சென்ற ‘ஐபேக்’ உளவு ரிப்போர்ட்?

திமுகவிற்கு தேர்தல் வேலை செய்யும் பிரஷாந்த் கிஷோருடைய ஐபேக் நிறுவனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் ஒருவர் ஸ்டாலினுக்கு கடந்த மார்ச் 28ஆம் தேதி மெயில் அனுப்பியது போல ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துவருகிறது. ஆனந்த் திவாரி என்பவரின் மெயில் ஐடியிலிருந்து அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் அந்த மெயிலில், “தமிழக தேர்தலில் நாம் தோற்கக் கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆ.ராசாவின் பேச்சு தான் அதற்குக் காரணம். கடந்த இரு நாட்களாக நாங்கள் செய்த அலசலில் பெருவாரியான பெண்கள் வாக்குகள் அதிமுக கூட்டணிக்குச் செல்லும் என்று தெரியவருகிறது

“ஆ.ராசாவால் எடப்பாடிக்கு கொத்தாக விழும் பெண்கள் வாக்கு” – ஸ்டாலினுக்கு சென்ற ‘ஐபேக்’ உளவு ரிப்போர்ட்?

குறிப்பாக, திமுகவைச் சேர்ந்த பெண்களின் வாக்குகளே திமுகவிற்கு எதிராக விழும். நமக்குச் சாதகமாக இருந்த களம் திமுக தலைவர்களின் அலட்சியமான பேச்சால் தற்போது எதிராக மாறியிருக்கிறது. கடும் போட்டியில் இருந்த களம் தற்போது முழுக்க முழுக்க அதிமுகவுக்குச் சாதகமாக மாறிவிட்டது. ஆகவே நாம் உடனடியாக நடவடிக்கை எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்த நான்கு விஷயங்களை உடனே செயல்படுத்துங்கள்.

“ஆ.ராசாவால் எடப்பாடிக்கு கொத்தாக விழும் பெண்கள் வாக்கு” – ஸ்டாலினுக்கு சென்ற ‘ஐபேக்’ உளவு ரிப்போர்ட்?

1.உடனடியாக ஆ.ராசா செய்தியாளர்களைச் சந்தித்து முதல்வரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

2.திமுகவில் இருக்கும் பெண்களை சமாதானம் செய்யும் வகையில் ஆ.ராசா மீது கட்சி ரீதியான நடவடிக்கை எடுங்கள்.

3.ஆ.ராசா சில நாட்கள் பிரச்சாரம் செய்வதற்கு தடை விதியுங்கள்.

4.பிரச்சாரத்துக்குச் செல்லும் கட்சித் தலைவர்களிடம் வார்த்தைகளைக் கவனமாகப் பேச சொல்லுங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

“ஆ.ராசாவால் எடப்பாடிக்கு கொத்தாக விழும் பெண்கள் வாக்கு” – ஸ்டாலினுக்கு சென்ற ‘ஐபேக்’ உளவு ரிப்போர்ட்?

இது உண்மையான மெயில் தானா என்று கேட்டால் நெருக்கமான வட்டாரங்கள் மறுப்பு தெரிவிக்கின்றனர். தோல்வி பயத்தில் அதிமுகவினர் கிளப்பி விட்ட வதந்தி தானே தவிர, இதில் இருப்பது எதுவும் உண்மை இல்லை. முழுக்க முழுக்க பொய்யான செய்தி என்று கூறிவிட்டனர். முன்னதாக, அதிமுக தோற்கும் என எடப்பாடிக்கு அதிமுக தேர்தல் வியூக குழு மெயில் அனுப்பியதாக ஒரு புகைப்படம் வலம் வந்தது. இச்சூழலில் திமுகவுக்கு எதிராக இப்படியொரு மெயில் வந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.