பேருந்தில் இலவசமாக பயணிக்கும் பெண்கள்- அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

 

பேருந்தில் இலவசமாக பயணிக்கும் பெண்கள்- அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

அரசுப்பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கும் மகளிர் பயணிகளை முறையாக நடத்த வேண்டும் என ஓட்டுநர்கள், நடத்துனர்களுக்கு மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.

பேருந்தில் இலவசமாக பயணிக்கும் பெண்கள்- அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

திமுக அளித்த வாக்குறுதியின்படி, கடந்த மாதம் 8 ஆம் தேதி முதல் சாதாரண கட்டண நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அரசு பேருந்துகளில் பயணிக்கும் பெண்களுக்கு கட்டணம் வசூலிக்காமல் பயணச்சீட்டு வழங்கப்பட்டுவருகிறது

இந்நிலையில், மாநகர் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஓட்டுநர் பேருந்தை குறித்த இடத்தில்தான் நிறுத்த வேண்டும். பேருந்தை நிறுத்ததிற்கு முன்போ, தாண்டியோ நிறுத்தி பயணிகளுக்கு இடையூறு செய்யக் கூடாது.

நடத்துனர்கள் வேண்டுமென்றே பேருந்தில் இடம் இல்லை என்று கூறி ஏறும் பெண் பயணிகளை இறக்கி விடக்கூடாது.

வயது முதிர்ந்த பெண் பயணிகளுக்கு இருக்கையில் அமர உதவி புரிய வேண்டும்.

பெண் பயணிகளிடம் எரிச்சலூட்டும் வகையில் கோபமாகவோ, ஏளனமாகவோ, இழிவாகவோ பேசக்கூடாது. உபசரிப்புடனும், அன்புடனும் நடந்து கொள்ள வேண்டும்

பெண் பயணிகள் ஏறும் போதும், இறங்கும் போதும் கண்காணித்து பாதுகாப்பாக இறக்கி விட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளது.