பெண்களை திருமணம் செய்து மற்றவர்களுக்கு விற்பனை ! பல நாட்களாக அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை !

 

பெண்களை திருமணம் செய்து மற்றவர்களுக்கு விற்பனை ! பல நாட்களாக அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை !

ராஜஸ்தானின் பரத்பூரைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஒரு பெண்ணை அழைத்து வந்தார். பின்னர் அந்த பெண்ணை வேறு ஒருவருக்கு விற்றுவிட்டார். பின்னர் பல முறை அந்த பெண் பலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அவர்களை புலம் பெயரும் தொழிலாளர்களும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். ஒரு இளைஞன் உள்பட 3 பேர் சேர்ந்து அந்த பெண்களை காட்டுப் பகுதியில் அழைத்து சென்று பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து அந்த பெண்கள் எப்படியோ ஒருவழியாக தப்பித்து உத்தரபிரதேசத்திற்குள் நுழைந்த பின்னர் அவர்களை போலீசார் மீட்டனர்.

பெண்களை திருமணம் செய்து மற்றவர்களுக்கு விற்பனை ! பல நாட்களாக அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை !

தப்பியவர்கள் ஜார்க்கண்டில் உள்ள ஹசாரிபாக் நகரைச் சேர்ந்தவர்கள். தங்களுக்கு நேர்ந்த கொடுமையை விவரித்தபோது, 22 வயதான பெண், 53 வயதான நந்தலால் யாதவ் என்பவருக்கு ரூ .1.5 லட்சத்திற்கு விற்கப்பட்டதாக கூறினார்.
இதையடுத்து பெண்கள் ஆக்ரா போலீசார் மே 31 அன்று ஹசாரிபாக் போலீசாரிடம் ஒப்படைத்தனர். 22 வயதான பாதிக்கப்பட்ட பெண் தனது அண்டை வீட்டாரால் விற்கப்பட்டதாக ஹசாரிபாக் எஸ்.பி. கார்த்திக் எஸ் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட சிறுமியின் அண்டை வீட்டார் மீது ஹர்தேவ் சர்மா, அவரது மனைவி ரேகா தேவி மற்றும் யாதவ் ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 366, 370, 376, 506 மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.