காதல் தோல்வியால் பெண் காவலர் தற்கொலை… இறப்பில் மர்மம் உள்ளதாக உறவினர்கள் புகார்!

 

காதல் தோல்வியால் பெண் காவலர் தற்கொலை… இறப்பில் மர்மம் உள்ளதாக உறவினர்கள் புகார்!

கோவை

கோவையில் காதல் தோல்வியால் ஆயுதப்படை பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது இறப்பில் மர்மம் உள்ளதாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்..

மதுரை மாவட்டம் கஞ்சம்பட்டியைச் சேர்ந்தவர் ராமஅழகு. இவரது மகள் மகாலட்சுமி (25). இவர் கோவை மாவட்ட ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வந்தார். இதற்காக உப்பிலிபாளையத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் தங்கி பணிக்கு சென்று வந்தார். அங்கு மகாலட்சுமி, உடன் பணிபுரியும் காவலர் அருண்குமாரும் காதலித்து வந்துள்ளனர்.

காதல் தோல்வியால் பெண் காவலர் தற்கொலை… இறப்பில் மர்மம் உள்ளதாக உறவினர்கள் புகார்!

இந்த நிலையில், நேற்று வழக்கம்போல் பணிக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய மகாலட்சுமியிடம் பேசுவதற்காக, அருண்குமார் செல்போனில் தொடர்புகொண்டு உள்ளார். ஆனால், அவர் அழைப்பை ஏற்காததால் சந்தேகமடைந்த அருண்குமார், மகாலெட்சுமியின் வீட்டிற்கு சென்று பார்த்தார். அப்போது, மகாலெட்சுமி ஜன்னலில் கயிறுகட்டி மண்டியிட்ட நிலையில் தூக்கில் தொங்கினார்.

அருண்குமார் உடனடியாக கயிற்றை அறுத்து கீழே இறக்கி பார்த்தபோது மகாலட்சுமி ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து அருண்குமார் அளித்த தகவலின் பேரில் கோவை பந்தய சாலை போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதி செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, மகாலட்சுமியின் இறப்பில் மர்மம் உள்ளதாக கூறி அவரது உறவினர்கள்புகார் தெரிவித்து உள்ளனர்.