கள்ளக்காதல் விவகாரத்தில் இளம்பெண் எரித்துக்கொலை – கார் ஓட்டுநர் கைது!

 

கள்ளக்காதல் விவகாரத்தில் இளம்பெண் எரித்துக்கொலை  – கார் ஓட்டுநர் கைது!

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் இளம் பெண்ணை கொலை செய்து, பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரை சேர்ந்தவர் ஒட்டுநர் செந்தில் மணி. இவரது மனைவி ரஞ்சிதா (27). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், கடந்த மாதம் 30ஆம் தேதி வீட்டில் இருந்து ரஞ்சிதா திடீரென மாயமாகினார். இதுகுறித்து, அவரது தந்தை முருகேசன் அளித்த புகாரின் பேரில் வடமதுரை போலீசார் விசாரித்து வந்தனர்.

போலீசார், ரஞ்சிதாவின் செல்போன் அழைப்புகளை அய்வு செய்தபோது, அவர் கடைசியாக எரியோட்டை சேர்ந்த கார் ஓட்டீடுநர் ராஜ்குமார் (32) என்பவருடன் பேசியது தெரிய வந்தது. இதனை அடுத்து, ராஜ்குமாரை பிடித்து போலீசார் விசாரித்தபோது, ரஞ்சிதா எரித்துக் கொல்லப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியது.

கள்ளக்காதல் விவகாரத்தில் இளம்பெண் எரித்துக்கொலை  – கார் ஓட்டுநர் கைது!

மேலும், போலீஸ் விசாரணையில், ரஞ்சிதாவுக்கும், ராஜ்குமாருக்கும் நீண்ட நாட்களாக கள்ளக்காதல் இருந்து வந்தது தெரியவந்தது. ரஞ்சிதா மாயமான கடந்த 30 ஆம் தேதி அன்று ராஜ்குமார், ரங்கமலை சிவன் கோவிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராஜ்குமார், ரஞ்சிதாவை அடித்துக்கொன்று, பின்னர் காட்டுப் பகுதியில் பெட்ரோல் ஊற்றி எரித்தது தெரியவந்தது.

தொடர்ந்து, ராஜ்குமார் அளித்த தகவலின் பேரில், வேடச்சந்தூர் டிஎஸ்பி மகேஷ் தலைமையிலான பேலீசார் ரஞ்சிதாவின் எலும்புகூட்டினை மீட்டு மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து ராஜ்குமார் மீது வழக்குப்பதிவு செய்து கைதுசெய்த போலீசார், அவரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.