சொத்து தகராறில் மாமியார் வெட்டிக்கொலை… மருமகன் கைது…

 

சொத்து தகராறில் மாமியார் வெட்டிக்கொலை… மருமகன் கைது…

கோவை

கோவை அருகே சொத்து தகராறில் மாமியாரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்த மருமகனை போலீசார் கைதுசெய்தனர்.

கோவை மாவட்டம் பேரூர் அருகே உள்ள குப்பனூர் கிராமத்தை சேர்ந்த சிவலிங்கம் மனைவி சிந்தாமணி. இவரது மகள் மோகனபிரியா. இவருக்கு, சதாசிவம் என்பவருடன் திருமணமாகி தாய் வீட்டிலேயே கணவருடன் வசித்து வந்தார். இந்த நிலையில், சதாசிவம் வீட்டின் பத்திரத்தை வழங்குமாறு அடிக்கடி மாமியார் சிந்தாமணியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

சொத்து தகராறில் மாமியார் வெட்டிக்கொலை… மருமகன் கைது…

நேற்று வழக்கம்போல் பட்டாவை கேட்டு சதாசிவம், தனது சிந்தாமணியிடம் தகராறில் ஈடுபட்டு உள்ளார். அதற்கு சிந்தாமணி மறுத்து விட்டதால் ஆத்திரமடைந்த அவர், அரிவாளால் சிந்தாமணியை சராமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உரியழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பேரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கொலையாளி சதாசிவத்தை கைது செய்தனர். தொடர்ந்து, சிந்தாமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.