எரிந்த நிலையில் பெண்ணின் உடல் பாகங்கள்… 3 தனிப்படைகள் அமைப்பு!

 

எரிந்த நிலையில் பெண்ணின் உடல் பாகங்கள்… 3 தனிப்படைகள் அமைப்பு!

இளம்பெண்ணின் உடல் பாகங்கள் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எரிந்த நிலையில் பெண்ணின் உடல் பாகங்கள்… 3 தனிப்படைகள் அமைப்பு!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட கொட் டாறு தரைப்பாலம் அருகே எரிந்த நிலையில் மனித உடல் பாகங்கள் கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற கிராம நிர்வாக அலுவலர் மற்றும் திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் இருவரும் அது இளம்பெண்ணின் உடல் பாகங்கள் என்பதை உறுதி செய்தனர்.

எரிந்த நிலையில் பெண்ணின் உடல் பாகங்கள்… 3 தனிப்படைகள் அமைப்பு!

இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை செய்யப்பட்ட பெண் யார்? அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் கொலை செய்யப்பட்ட பெண் வெளியூரில் இருந்து அந்த வழியாக வந்திருக்கலாம். அப்போது அவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து விசாரிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது