அரசுப்பேருந்து மீது லாரி மோதல்; பெண் பலி, 7 பேர் படுகாயம்!

 

அரசுப்பேருந்து மீது லாரி மோதல்; பெண் பலி, 7 பேர் படுகாயம்!

நெல்லை

நெல்லை அருகே அரசுப்பேருந்து மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில், சிவகாசியை சேர்ந்த பெண் உயிரிழந்தார்.

குமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து 20-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று அரசு பேருந்து ஒன்று தென்காசிக்கு சென்று கொண்டிருந்தது. பேருந்தை நாகர்கோவில் அடுத்த பழவூரை சேர்ந்த பழனி (52) என்பவர் ஓட்டிச் சென்றார். நெல்லை மாவட்டம் கடையம் அடுத்த எல்லைபுளி பகுதியில் சென்றபோது பேருந்தின் மீது, எதிர்பாராத விதமாக எதிரே வந்த டிப்பர் லாரி மோதியது.

அரசுப்பேருந்து மீது லாரி மோதல்; பெண் பலி, 7 பேர் படுகாயம்!

இதில், கட்டுப்பாட்டை இழந்த அரசுப்பேருந்து சாலையோர பள்ளத்தில் இறங்கி சிறிது தூரம் ஓடி நின்றது. அப்போது, பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட சிவகாசியை சேர்ந்த சங்கரி என்பவர், பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். மேலும், ஓட்டுநர் பழனி உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

விபத்து குறித்து, தகவல் அறிந்த கடையம் போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய டிப்பர் லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.