மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் பெண் பலி!

 

மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் பெண் பலி!

கிருஷ்ணகிரி

ஓசூர் அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் திருப்பூரை சேர்ந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் யுவராஜ்(35). இவர் சொந்தமாக தையல் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சிந்து (28). இவர்களது மகன் அஷ்வின் பிரசாத்(3). நேற்று முன்தினம் யுவராஜ், திருப்பூரில் இருந்து குடும்பத்துடன் ஓசூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அதிகாலை உத்தப்பள்ளி அருகே உள்ள துப்புகானபள்ளி பகுதியில் சென்றபோது, எதிர்பாராத விதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தின் மீது மோதியது.

மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் பெண் பலி!

இந்த விபத்தில் காரின் முன்பகுதி சேதமடைந்த நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கி யுவராஜ், சிந்து மற்றும் அஷ்வின் பிரசாத் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மூவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே சிந்து பரிதாபமாக உயிரிழந்தார். யுவராஜ் மற்றும் சிறுவன் அஷ்வின் பிரசாத்துக்கு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து, உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.