இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில், பெண் பலி!

 

இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில், பெண் பலி!

அரியலூர்

ஜெயங்கொண்டம் அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

அரியலூர் மாவட்டம் தா.பழுர் அடுத்த கோடாலிகருப்பூர் பகுதியை சேர்ந்தவர் மதிவாணன். இவரது மனைவி பங்கஜம். இவர் மகன் நடராஜனுடன் தஞ்சை மாவட்டம் பந்தநல்லூரில் நடந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். பின்னர் இருவரும் இருசக்கர வாகனத்தில் அரியலூருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில், பெண் பலி!

தா.பழுர் அடுத்த கோடாலி கருப்பூர் அருகே வளைவில் திரும்பியபோது நடராஜன் வாகனத்தின் மீது, எதிரே வந்த தனியார் பேருந்து மோதியது. இந்த விபத்தில் பங்கஜம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், நடராஜன் பலத்த காயமடைந்தார்.

அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தகவல் அறிந்த தா.பழுர் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.