“ஜெயலலிதா பெயர் சொல்லி நடக்கும் இந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” : எம்.பி. கனிமொழி ஆவேசம்!

 

“ஜெயலலிதா பெயர் சொல்லி நடக்கும் இந்த ஆட்சியில்  பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” : எம்.பி. கனிமொழி ஆவேசம்!

சேலம் மாவட்டம் எடப்பாடியிலிருந்து திமுக மகளிரணி செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி இன்று பரப்புரையை தொடங்கினார்.

“ஜெயலலிதா பெயர் சொல்லி நடக்கும் இந்த ஆட்சியில்  பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” : எம்.பி. கனிமொழி ஆவேசம்!

இந்நிலையில் சேலம் கொங்கணாபுரத்தில் மக்கள் மத்தியில் பேசிய அவர், “ஜெயலலிதா பெயரை சொல்லி நடக்கும் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. பெண்கல்வி கேள்விக்குறியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகள் பெண்களின் கல்வி சுதந்திரத்தையும் அழிக்க கூடிய செயல்களை செய்து வருகின்றன. மத்திய அரசு கொண்டு வரும் விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை முதல்வர் வரவேற்கிறார்” என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

“ஜெயலலிதா பெயர் சொல்லி நடக்கும் இந்த ஆட்சியில்  பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” : எம்.பி. கனிமொழி ஆவேசம்!

முன்னதாக திமுக பிரச்சாரத்தை விமர்சித்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார். கனிமொழி எடப்பாடியிலிருந்து இல்லை விண்வெளிக்கு சென்று பிரச்சாரம் செய்தாலும் மக்கள் நம்பமாட்டார்கள் என்று விமர்சித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.