தம்பி மனைவி மீது ஆசைப்பட்ட அண்ணன்- போக சொன்ன கணவர் -அடுத்து நடந்த கொடுமை

 

தம்பி மனைவி மீது ஆசைப்பட்ட அண்ணன்- போக சொன்ன கணவர் -அடுத்து நடந்த கொடுமை

மைத்துனரோடு உல்லாசத்துக்கு போக சொல்லி கொடுமை செய்த கணவர் மீது ஒரு பெண் புகார் கொடுத்துள்ளார்

குஜராத்தின் அகமதாபாத்தின்  காட்லோடியா வட்டாரத்தில் வசிக்கும்34 வயது பெண் கடந்த 2008ம் ஆண்டு அதே  பகுதியை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டார் .பின்னர் அவர் இரு குழந்தைகளுக்கு தாயானார் .அதன் பிறகு அவரின் கணவர்  சரியான வேலையில்லாமல் இருந்தார் .

தம்பி மனைவி மீது ஆசைப்பட்ட அண்ணன்- போக சொன்ன கணவர் -அடுத்து நடந்த கொடுமை

அதனால்  2013 ஆம் ஆண்டில், அவரின்  கணவர் நைஜீரியாவின் லாகோஸில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிக்கு சென்றார் . பின்னர், அவரும் லாகோஸுக்கு சென்று  அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்தார் . 2016 ஆம் ஆண்டில், அந்த பெண் தனது  குழந்தையுடன் இந்தியா திரும்பினார். அடுத்த ஆண்டு அக்டோபரில், அவரது மாமியார் காலமானார், அதைத் தொடர்ந்து அவரது கணவரும் இந்தியா திரும்பினார்.

அதன் பிறகு அந்த கணவருக்கு இங்கு சரியான வேலையில்லததால் அவரின் சகோதரர் அவருக்கு பண உதவி செய்தார் . மேலும் அவர் தம்பி மனைவி மீது ஆசைப்பட்டார்.

அப்போது அந்த கணவர் அந்த பெண்ணை  தன்னுடைய சகோதரருடன் உல்லாசமாக இருக்க சொல்லி கொடுமைப்படுத்தினார் .அதற்கு அந்த பெண் சம்மதிக்காமல் இருந்தார் .அதனால் அவர் தினமும் சித்திரவதை அனுபவித்தார் .அதன் பிறகு  அந்த பெண் அந்த கொடுமை பொறுக்க முடியாமல் அவரின்  உறவினர்களிடம் கூறினார் .பின்னர்  அவர்களின்  ஆலோசனையின் பேரில் அந்த பெண் கணவர் மற்றும் மைத்துனர் மீது போலீசில் புகார் கூரினார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பெண்ணின் கணவரை   விசாரித்து வருகின்றனர் .