வீட்டின் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பெண் உயிரிழப்பு!

 

வீட்டின் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பெண் உயிரிழப்பு!

கோவை

கோவை மாவட்டம் போத்தனூர் அருகே வீட்டின் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் போத்தனூரை அடுத்த வெள்ளலூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் சம்பத். இவரது மனைவி சித்ரகலா (59). இவர் நேற்று மதியம் கணவருக்கு உணவு பரிமாறி கொண்டிருந்தார். அப்போது, தண்ணீர் வரும் சத்தம் கேட்டதால் வீட்டின் முன்புள்ள தரைமட்ட தண்ணீர் தொட்டியை பார்க்க சென்றுள்ளார்.

வீட்டின் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பெண் உயிரிழப்பு!

தொட்டியை எட்டிப்பார்த்தபோது எதிர்பாராத விதமாக தவறி உள்ளே விழுந்தார். நீண்ட நேரமாகியும் சித்ரகலா வராததால் சந்தேகமடைந்த சம்பத், தொட்டிக்கு சென்று பார்த்தார். அப்போது, 8 அடி ஆழமுள்ள தொட்டியில் சித்ரகலா விழுந்து கிடப்பது தெரிய வந்தது.

அதிர்ச்சியடைந்த சம்பத், அவரை உடனடியாக மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு சித்ரகலாவை பரிசோதித்த மருத்துவர், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.