கிணற்றில் தவறி விழுந்து இளம்பெண் பலி!

 

கிணற்றில் தவறி விழுந்து இளம்பெண் பலி!

வேலூர்

குடியாத்தம் அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மீனூர் கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் கருணாகரன். இவரது மனைவி பரிமளா. இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டின் அருகில் உள்ள கிணற்று பம்புசெட்டிற்கு தண்ணீர் எடுக்க சென்றார்.

மோட்டாரில் தண்ணீர் பிடித்தபோது, எதிர்பாராத விதமாக பரிமளா 40 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தார். நீச்சல் தெரியாததால் அவர் உயிருக்கு போராடியதை கண்டு அந்த பகுதி இளைஞர்கள் கிணற்றில் குதித்து அவரை மீட்க முயன்றனர்.

கிணற்றில் தவறி விழுந்து இளம்பெண் பலி!

மேலும், தகவல் அறிந்த குடியாத்தம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1.30 மணிநேர தேடலுக்கு பின் அவர்கள், பரிமளாவை உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்டனர்.

பின்னர், குடியாத்தம் தாலுகா போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இதுகுறித்து கருணாகரன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.