`மிரட்டி பணம் பறித்தனர்; ரகசிய வீடியோ எடுத்தார் ;-நிருபர்களை சிறைக்கு தள்ளிய பெண் டாக்டர்

 

`மிரட்டி பணம் பறித்தனர்; ரகசிய வீடியோ எடுத்தார் ;-நிருபர்களை சிறைக்கு தள்ளிய பெண் டாக்டர்

பெண் சித்த மருத்துவரை மிரட்டி பணம் பறித்த நிருபர்கள் நான்கு பேரை காட்பாடி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

`மிரட்டி பணம் பறித்தனர்; ரகசிய வீடியோ எடுத்தார் ;-நிருபர்களை சிறைக்கு தள்ளிய பெண் டாக்டர்
வேலூர்மாவட்டம், காட்பாடி பிரம்மபுரம் பகுதியை சேர்ந்த சித்த மருத்துவர் விஜயலட்சுமி (40) , இவர் தொடர்ந்து அப்பகுதியில் சித்த வைத்தியம் பார்த்து வருகிறார். நீரிழிவு உள்ள நோயாளிகள் இன்சூலின் ஊசி போட இங்கு வருவது வழக்கம். ஆனால், அவர்கள் மருந்துகளை வாங்கி வந்து தாங்களாகவே ஊசி போட்டு சென்று வந்துள்ளனர்.

இதனை அறிந்த பிரம்மபுரம் பகுதியை சேர்ந்த செய்தி அலசல் என்ற நாளிதழில் பணிபுரியும் விஜயகுமார், காளிமுத்து, தென்னரசு ஆகியோர் இதுகுறித்து வரலாறு நாளிதழின் நிருபர் சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்த ஆனந்த சீனிவாசனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர் இவர்களுடன் இணைந்து சித்த மருத்துவரான விஜயலட்சுமியை மிரட்டி ரூ.12500 பணம் பெற்றுகொண்டு சென்றுள்ளனர். இதனை விஜயலட்சுமி ரகசியமாக தனது கைபேசியில் பதிவு செய்துள்ளார். பின்னர் இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு விஜயலட்சுமி வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளார்.

`மிரட்டி பணம் பறித்தனர்; ரகசிய வீடியோ எடுத்தார் ;-நிருபர்களை சிறைக்கு தள்ளிய பெண் டாக்டர்

இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் காட்பாடி போலீஸார், பெண் டாக்டரை மிரட்டி பணம் பறித்த நிருபர்கள் விஜயகுமார், காளிமுத்து,தென்னரசு, ஆனந்த சீனிவாசன் ஆகிய 4 பேர் மீது 294 (B) , 417, 420 , 384 , 506(1) Women harrasement Act ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.