அரசு மருத்துவமனையில் வெண்டிலேட்டர் கோளாறால் இளம்பெண் பலி!

 

அரசு மருத்துவமனையில் வெண்டிலேட்டர் கோளாறால் இளம்பெண் பலி!

கன்னியாகுமரி

குமரி அரசு மருத்துவமனையில் வெண்டிலேட்டரில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக இளம்பெண் உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அடுத்த இலவியார் தோட்டத்தை சேர்ந்தவர் பாபு. கூலி தொழிலாளி. இவரது மனைவி ரேவதி (35). இவருக்கு சில நாட்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் ரேவதி குட்டகுளி ஆரம்ப சுகாதார நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அரசு மருத்துவமனையில் வெண்டிலேட்டர் கோளாறால் இளம்பெண் பலி!

பின்னர், மேல் சிகிச்சைக்காக குமரி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு வெண்டிலேட்டர் கருவி உதவியுடன் ரேவதி சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், நேற்று வெண்டிலேட்டரில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக கருவி செயல்பட வில்லை. இதனால், ரேவதி மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

மனைவி இறந்ததால் அதிர்ச்சியடைந்த பாபு, இதுகுறித்து ஆசாரிப்பள்ளம் மருத்துவமனை காவல் நிலையத்தல் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.