ஒரத்தநாடு அருகே பேனர் சரிந்து விழுந்ததில் பெண் பலி!

 

ஒரத்தநாடு அருகே பேனர் சரிந்து விழுந்ததில் பெண் பலி!

தஞ்சை

ஒரத்தநாடு அருகே சாலையோரம் வைத்திருந்த பிளக்ஸ் பேனர் சரிந்து விழுந்ததில், இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி அம்மானிபட்டியை சேர்ந்தவர் சாமிக்கண்ணு. இவரது மனைவி விஜயராணி. இவர் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு, இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.

ஒரத்தநாடு அருகே பேனர் சரிந்து விழுந்ததில் பெண் பலி!

ஒரத்தநாடு அடுத்த, மேல மேட்டுப்பட்டி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த ராட்சத பேனர் விஜயராணி மீது சரிந்து விழுந்தது. இதில், பலத்த காயமடைந்த விஜயராணியை அருகில் இருந்தவர்கள் மீட்டு, தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, நேற்றிரவு விஜயராணி பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்த திருவோணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மேட்டுப்பட்டியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் தந்தை இறப்பையொட்டி, தடையை மீறி சாலையோரத்தில் ராட்சத பிளக்ஸ் பேனர் வைத்தது தெரிய வந்தது. இதனையடுத்து, ரவிச்சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.