கூடலூர் அருகே காட்டு யானைத் தாக்கி பெண் உயிரிழப்பு!

 

கூடலூர் அருகே காட்டு யானைத் தாக்கி பெண் உயிரிழப்பு!

கூடலூர் அருகே காட்டு யானை தாக்கியதில் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்மைக்காலமாக காட்டு யானைகள் மக்களை தாக்கும் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் யானைகள் தாக்கி பலர் உயிரிழந்துள்ளனர். அங்கு ஒற்றை யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும் இதனை தடுக்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மாவட்ட மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.

கூடலூர் அருகே காட்டு யானைத் தாக்கி பெண் உயிரிழப்பு!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கோக்கால் பகுதியில் வசித்து வந்தவர் கமலாவதி(56). இவர் இன்று அதிகாலை காட்டுப்பகுதிக்கு சென்ற நிலையில், அங்கிருந்து காட்டு யானை இவரை தாக்கியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த கமலாவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.