இரண்டு முறை கருக்கலைப்பு… திருமணம் செய்ய மறுக்கும் காவலர் : இளம்பெண் பரபரப்பு புகார்!

 

இரண்டு முறை கருக்கலைப்பு… திருமணம் செய்ய மறுக்கும் காவலர் : இளம்பெண் பரபரப்பு புகார்!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த அசோகன் டாக்டர் தெருப் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை(29). இவர் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த மேகலா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி பலமுறை உடலுறவு வைத்து கொண்டுள்ளார். இதனால் கருவுற்ற மேகலா கருவை இரண்டு முறை கலைத்துள்ளார்.

இரண்டு முறை கருக்கலைப்பு… திருமணம் செய்ய மறுக்கும் காவலர் : இளம்பெண் பரபரப்பு புகார்!

இந்நிலையில் தற்போது அண்ணாமலைக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க அவரின் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். இதை அறிந்த மேகலா தனது குடும்பத்தினருடன் அண்ணாமலை வீட்டுக்கு சென்று தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார். ஆனால் அதை அண்ணாமலை குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.

இரண்டு முறை கருக்கலைப்பு… திருமணம் செய்ய மறுக்கும் காவலர் : இளம்பெண் பரபரப்பு புகார்!

இதையடுத்து மேகலா அண்ணாமலை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கண்காணிப்பாளர் விஜயகுமாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .